Thursday, July 14, 2011

இன்றைய ஊடகங்கள்.

இன்றைய நாட்களில் ஊடகத்துறையே மக்களின் வாழ்க்கையில் பெரும்பங்கு வகிப்படனை கானமுடிகின்ரத். அந்தவகையில் ஒரு சமூகத்தின் உயர்ச்சியில் ஊடகத்துறையே பெருமளவு தங்கியுள்ளமை வெட்டவெளிச்சமான உண்மை எனலாம். ஊடகம் எனும்போது 'போயுரைக்கது உண்மைகளை உலகிற்கு உரைப்பது' என பொருள் கொள்ளல் நன்று.

ஒவ்வொரு ஊடகவியலாளனும் உண்மையாகவும், தெளிவாகவும் , நேர்மையாக்கவுமிருக்க வேண்டும் என்பது பரிபூரண உண்மை எனலாம்.

அந்தவகையில் ஊடகத்துறை எனும்போது அங்கே தனிப்பட்ட விருப்பு-வெறுப்பு என்பவற்றுக்கு சிறிதளவேனும் இடமளிக்கது ஒவ்வொரு ஊடகவியலாளனும் மிக நேர்த்தியாகத் தொழிர்ப்பட வேண்டும். தனிப்பட்ட ரீதியில் அவர்கள் புரியும் ஒவ்வொரு தவறுகளும் அவர்களையும் ஊடகத்துரையினையும் மட்டுமல்லாமல் சமூகத்தையும் பாதிக்குமேன்பது மனங்கொள்ளத்தக்கது.

அந்தவகையில் ஒரு தனிப்பட்ட தன சொந்தவிடயத்திலேனும் இவர்கள் தவறுவார்களாயின் அது ஊடகத்துறை மீதுள்ள மக்களின் பரிபூரண நம்பிக்கைக்கும், ஆதரவிற்கும் பங்கம் விளைவிப்பதாய் அமையும் எனலாம்.

எனவே ஊடகவியலாளன் என்பவன் தனது சுயநிலை என்பதனை சரியானதாகப்பென வேண்டும் என்பது கட்டாயமானது. இந்த சமுதாயத்தின் முன் ஊடகவியலாளர்கள் கொண்டுள்ள கடமை மிகப்பெரியதாகும். அதை நோக்குகையில் ஒரு விடயத்தின் நேர்த்தியை அறிந்து, தெளிவாக சிந்தித்து, அதன் நன்மை-தீமை, சரி-தவறு என்பவற்றை சமூகத்திற்கு வெளிப்படுத்தும் திறன் நேர்த்தியானதாக இருக்கவேண்டும்.

இவ்வாறாக சமூக வளர்ச்சியானது ஊடகவியலாளர்களிடமும், ஊடகங்களிடமுமே தங்கியுள்ளமை நிதர்சனமான உண்மையே! எனவே ஒவ்வொரு ஊடகவியலாளர்களும் தத்தமது போருப்பரிந்து நேர்த்தியாக செயற்ப்பட வேண்டியது மிக மிக அவசியமானதொன்று எனலாம்.



*குறிப்பு- மேலே கூறப்பட்ட விடயங்கள் தனிப்பட யாரையும் சார்ந்தவை அல்ல. பொதுப்படையான கருத்துக்கள் மட்டுமே என்பதை மனதில் கொள்க.....!!! *

2 comments: