Thursday, July 14, 2011

இன்றைய ஊடகங்கள்.

இன்றைய நாட்களில் ஊடகத்துறையே மக்களின் வாழ்க்கையில் பெரும்பங்கு வகிப்படனை கானமுடிகின்ரத். அந்தவகையில் ஒரு சமூகத்தின் உயர்ச்சியில் ஊடகத்துறையே பெருமளவு தங்கியுள்ளமை வெட்டவெளிச்சமான உண்மை எனலாம். ஊடகம் எனும்போது 'போயுரைக்கது உண்மைகளை உலகிற்கு உரைப்பது' என பொருள் கொள்ளல் நன்று.

ஒவ்வொரு ஊடகவியலாளனும் உண்மையாகவும், தெளிவாகவும் , நேர்மையாக்கவுமிருக்க வேண்டும் என்பது பரிபூரண உண்மை எனலாம்.

அந்தவகையில் ஊடகத்துறை எனும்போது அங்கே தனிப்பட்ட விருப்பு-வெறுப்பு என்பவற்றுக்கு சிறிதளவேனும் இடமளிக்கது ஒவ்வொரு ஊடகவியலாளனும் மிக நேர்த்தியாகத் தொழிர்ப்பட வேண்டும். தனிப்பட்ட ரீதியில் அவர்கள் புரியும் ஒவ்வொரு தவறுகளும் அவர்களையும் ஊடகத்துரையினையும் மட்டுமல்லாமல் சமூகத்தையும் பாதிக்குமேன்பது மனங்கொள்ளத்தக்கது.

அந்தவகையில் ஒரு தனிப்பட்ட தன சொந்தவிடயத்திலேனும் இவர்கள் தவறுவார்களாயின் அது ஊடகத்துறை மீதுள்ள மக்களின் பரிபூரண நம்பிக்கைக்கும், ஆதரவிற்கும் பங்கம் விளைவிப்பதாய் அமையும் எனலாம்.

எனவே ஊடகவியலாளன் என்பவன் தனது சுயநிலை என்பதனை சரியானதாகப்பென வேண்டும் என்பது கட்டாயமானது. இந்த சமுதாயத்தின் முன் ஊடகவியலாளர்கள் கொண்டுள்ள கடமை மிகப்பெரியதாகும். அதை நோக்குகையில் ஒரு விடயத்தின் நேர்த்தியை அறிந்து, தெளிவாக சிந்தித்து, அதன் நன்மை-தீமை, சரி-தவறு என்பவற்றை சமூகத்திற்கு வெளிப்படுத்தும் திறன் நேர்த்தியானதாக இருக்கவேண்டும்.

இவ்வாறாக சமூக வளர்ச்சியானது ஊடகவியலாளர்களிடமும், ஊடகங்களிடமுமே தங்கியுள்ளமை நிதர்சனமான உண்மையே! எனவே ஒவ்வொரு ஊடகவியலாளர்களும் தத்தமது போருப்பரிந்து நேர்த்தியாக செயற்ப்பட வேண்டியது மிக மிக அவசியமானதொன்று எனலாம்.



*குறிப்பு- மேலே கூறப்பட்ட விடயங்கள் தனிப்பட யாரையும் சார்ந்தவை அல்ல. பொதுப்படையான கருத்துக்கள் மட்டுமே என்பதை மனதில் கொள்க.....!!! *

Sunday, July 10, 2011

இணையத்துள் யாழ்த்தாய்...!

யாழின் கல்விநிளையானது ஒரு காலத்தில் அதியுச்ச வளர்ச்சி பெற்று சிறப்புடன் காணப்பட்டது. எனினும் இன்று அந்த நிலை வீழ்ச்சியடைந்து சிறிது சிறிதாகப் பின்தள்ளப்பட்டு மிகவும் கவலைக்குரிய நிலையில் தற்காலம் காணப்படுகிறது.

ஒருகாலத்தில் மாணவர்கள் பாடசாளைக்கல்வியையும், கல்வி நிறுவனங்களின் உதவியையும் நாடியே தமது கற்றல் வாழ்க்கையை தொடர்ந்தனர். கல்வியை வழங்க கூடிய தொழிநுட்ப சாதனங்களின் வருகையின் தடத்தையே காணமுடியாத அக்காலத்தில் கல்விநிலை அத்யுச்ச்மாகக் காநப்பட்டுஇருந்தது.

எனினும் தற்காலங்களில் தொழிநுட்ப உயர்ச்சிகள் காரணமாக கல்வித்துறை வளர்ச்சி கண்டாலும்; மாணவரது கற்கும் திறன் பாரிய வீழ்ச்சியை எதிர்நூக்கி வருவது கவலைக்குரிய விடையம் எனலாம்.

அந்தவகையில் முக்கியம் பெறுவது தற்க்கால இணையப்பாவனை. கல்விக்கான பாவனை மார்ரமடைந்துவருகின்றமை வெட்கக்கேடான விடயமாகும்.

அதிலும் இணையத்தில் இன்று பேஷ் புக் பாவனையே யாழின் மாணவர்களிடம் வேரூன்றி காணப்படுகின்றது.

மாணவர்கள் கல்விவழர்ச்சிக்கு இணையத்தை பயன்படுத்தும் நிலை மார்ரமடைன்ஹு பொழுதுபோக்கிற்க்காக மட்டுமே இணையத்தை நாடுவதனால்த்தான் கல்விநிலை பின்செல்கின்றது எனலாம்.

பேஷ் புக், ட்விட்டர் போன்ற சமூக வலைப்பின்னல்களின் ஆதிக்கமும்; அதிகரித்து வருகின்ற வலைத்தள பிராந்திய அச்சுறுத்தல் முதலியவற்றின் இனிப்பான செயர்ப்பாடுகளால் திசை திருப்பப்பட்ட மாணவர்கள் இன்று கல்வியில் பிந்தள்ளப்படுவ்துடன்; இணைய மோகத்திலிருந்து வெளிவர முடியாமல் வாழ்க்கையையே அழித்துக்கொள்வது கசப்பான உண்மையே...!

யாழின் கல்விநிலை மீண்டும் உயர வேண்டும்...!

யாழ் மாணவர்கள் வரலாற்றில் சாதனை பதிக்கவேண்டும்...!

தோழர்களே விழிப்படைவோம்...
இணைய மோகத்திலிருந்து யாழ்த்தாயை மீட்டிடுவோம்...!
ஜெயித்திடுவோம்..!!!

Saturday, July 9, 2011

விடியலின் ஜனனம்
உங்களை அன்போடு
வரவேற்கிறது...!