Monday, November 7, 2011

உலகின் மர்மங்கள் இரண்டு..

இந்த நூற்றாண்டிலும் உலகத்தில் பல விந்தைகள் இருக்கத்தான் செய்கின்றன. அந்தவகையிலே பலருக்கும் பலவிடயங்கள் புரியாத புதிராகவே இன்றும் உள்ளது. இதை நோக்குகையில் நாம் இரு விடயங்கள் பற்றி இன்று நோக்கலாம். அதில் ஒன்று
1) அமேசான் நதிப்பிரதேசம்
2) பேமுடா முக்கோண கடல் பிரதேசம் என்பனவாகும்.

அந்தவகையில் முதலில் பேமுடா முக்கோண கடல் பிரதேசம் பற்றி நோக்குகையில் இப்பிரதேசமானது அட்லாண்டிக் சமுத்திரத்தில் முக்கோண வடிவில் அமைந்த பகுதி ஆகும்.இப் பகுதியில் பயணித்த பல கப்பல்களும் விமானங்களும் மர்மமான முறையில் காணாமல் போவதாகத் தெரிவிக்கப்பட்டது. "Devil's Triangle"-  "சாத்தானின் முக்கோணம்' என்றும் இது அழைக்கப்படுகிறது.  இப்பிரதேசத்தில் பயணிக்கின்ற கப்பல்களும்- இப்பிரதேசத்தின் மேலாக பயணிக்கும் விமானங்கள் பலவும் இம் முக்கோண பிரதேசத்தை வெற்றிகரமாக தாண்டிய செய்தி இதுவரை கிடைத்ததில்லை எனலாம்.
மேலும் அவை இப்பிரதேசத்திற்குள்ளாகவே விபத்திற்குள்ளாகி தடயங்கள் ஏதும் கிடைக்கப்பெறாமல் மாயமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பல அறிவியல் விஞ்ஞானிகளினது பல்வேறுபட்ட பரிசோதனைகளினதும் ஆராய்ச்சிகளினதும் பெறுபேறு ஒன்றுதான். அது என்னவெனில் இன்னும் இப்பிரதேசத்தைப்பற்றிய விடயங்கள் எதுவும் பூரணமாகப் பெறப்படவில்லை என்பதாகும்.  இப்பிரதேசத்தில் நடைபெறும் விபத்துக்களுக்கு பற்பல காரணங்கள் கற்பிக்கப்பட்ட போதிலும் சில கருத்துக்கள் இப்பிரதேசத்தில் காந்தயீர்ப்பு விசை மிக அதிகமாக தொழிற்படுகிறது என்பதை அடியொற்றி அமைந்துள்ளன. மேலும் வேறு பல காரணங்களும் கூறப்படுகின்றன. இங்கு ஏற்பட்ட விபத்துக்கள் பற்றி நோக்குகையில், பிளைட்-19' என்பது குண்டு வீசும் விமானங்களுக்குப் பயிற்சியளிக்கும் விமானமாகும். இது, அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமானது. இந்த விமானம் 1945-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி, ஒரு பயிற்சியில் பங்குகொண்டது. அதன் பிறகு, அட்லாண்டிக் கடலின்மீது பறந்துகொண்டிருந்தது. அது மர்மமான முறையில் திடீரென்று பெர்முடா பகுதியில் மறைந்துபோனது. . இந்த நிகழ்வைப் பற்றி கடற்படை அதிகாரிகள் ஒரு அறிக்கை அளித்தார்கள். அந்த அறிக்கையில் உள்ள விவரம் இதுதான்:
""விமானம் தன் கட்டுப்பாட்டை இழந்து காணாமல் போவதற்குச் சற்று முன்பு, விமானத்தின் திசை காட்டி இயற்கைக்கு மீறிய அளவுகளைக் காட்டியது. அனுபவம் வாய்ந்த விமானி லெப்டினென்ட் சார்லஸ் கரோல் டெய்லரின் மேற்பார்வையில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிகழ்வு ஒரு புரியாத புதிராக உள்ளது.''

இதைவிட மர்மமான இன்னொரு நிகழ்ச்சி உண்டு. ஒரு கப்பல் காணாமல் போய்விட்டது. அந்தக் கப்பலை மீட்பதற்காக கடற்படை விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த மீட்பு விமானத்தில் மொத்தம் 13 பேர் பயணம் செய்தார்கள். வட அட்லாண்டிக் கடலில் பறந்துகொண்டிருந்தது இந்த விமானம். சில மணிநேரத்திற்குப் பிறகு இந்த விமானத்திலிருந்து எந்தத் தகவலும் இல்லை. அப்படியே தொலைந்துபோய்விட்டது! இந்த சம்பவமும் பெர்முடா பகுதியில் நடந்தது.
1872-ஆம் ஆண்டு 282 டன் எடைகொண்ட "மேரி செலஸ்டி' என்னும் கப்பலும், 1864-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி "மேரி செலஸ்டி' என்று அதே பெயர்கொண்ட இன்னொரு துடுப்புக் கப்பலும் பெர்முடா முக்கோணப் பகுதியில் மறைந்துபோனதாக பழைய கால செய்தித் தாள்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
மேலும், இந்த பெர்முடா முக்கோணப் பகுதியில் 1918-ஆம் ஆண்டு மார்ச் 4-ஆம் தேதிக்குப் பிறகு ஒரு சம்பவம் நடந்தது. பார்படோஸ் தீவிலிருந்து கிளம்பியது "யுஎஸ்எஸ் சைக்ளோப்ஸ்' எனும் ஒரு பயணிக்கப்பல். அது எந்தச் சுவடும் இல்லாமல் தனது 309 ஊழியர்களுடன் தொலைந்து போனது.
"ஆரான் பர்' என்பவர் முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி. இவரது மகள் "தியோடோசியா பர் அல்ஸ்பான்', தெற்கு கரோலினாவிலிருந்து நியூயார்க் நகரத்திற்கு "பேட்ரியாட்' எனும் கப்பலில் பயணம் செய்தார். பின்பு, அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. பெர்முடா முக்கோணத்தில் 1812-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி நடந்த சம்பவம் இது.
முக்கோண எல்லைக்கு உட்பட்ட பகுதிதான் போர்டோரிகோ. இங்குள்ள சான்ஜூ நகரின் வான் பகுதியிலிருந்து ஒரு விமானம் பறந்தது. இந்த விமானத்தின் பெயர் "டக்லஸ் பிசி-3.' மியாமி நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்த விமானம் திடீரென்று மறைந்துபோனது. அதில் 32 பேர் பயணம் செய்தார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. இது நடந்தது 1948-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி.
அசோர்ஸிலிருந்து பெர்முடா செல்லும் பயணிகள் விமானம் 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி காணாமல் போனது. 1949 ஜனவரி 17-இல் ஜமைக்காவிலிருந்து, கிங்ஸ்டனுக்குப் பறந்து சென்ற இன்னொரு விமானத்தைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை. இந்த இரண்டு விமானங்களும் தென் அமெரிக்க பிரிட்டிஷ் ஏர்வேஸýக்குச் சொந்தமான ஒரே ரக விமானங்கள். இதுவும் பெர்முடா முக்கோணத்தில் நடந்தது.
   
இன்னும் ஒரு பெர்முடா தகவல். முன்பு கந்தகம் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது  "எஸ் எஸ் மரைன் சல்பர் குயின்' எனும் கப்பல். இது, பிறகு 1963 பிப்ரவரி 4-ஆம் தேதி எண்ணெய் ஏற்றிக்கொண்டு புளோரிடா வழியாக சென்றுகொண்டிருந்தது. அதில் 39 பயணிகள் இருந்தார்கள். அந்தக் கப்பலிலிருந்து பிறகு எந்தத் தொடர்பும் இல்லை. இந்தக் கப்பல் "காண முடியாத இடத்திற்குச் சென்றுவிட்டது' என்ற தகவலை மட்டும் பத்திரிகைகளில் காணமுடிந்தது.
மேலும், ஒரு வியப்பான சம்பவம் பெர்முடா முக்கோணப் பகுதியில் நடந்தது. இது நடந்தது 1921-இல். "ரய் ஃபுகு மரு' எனும் ஜப்பானியக் கப்பல் எந்தத் தடயமும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக மூழ்கிவிட்டது. அப்போது கப்பலிலிருந்து,""கத்திக் கூம்புபோல அபாயம் தெரிகிறது...! விரைந்து உதவிக்கு வாருங்கள்...''எனும் வார்த்தைகள் அபாய அறிவிப்பாக அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. கத்திக் கூம்பு எனும் வார்த்தை எதைக் குறிக்கிறது என்று இன்றுவரை அறியப்படவில்லை.
      
மேற்கண்ட அனைத்து மர்மச் சம்பவங்களும் பெர்முடா முக்கோணப்பகுதியில் நடந்திருந்தாலும், ஏன் இப்படி நடக்கின்றன? என்ற கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை.
1962-இல் "பிளைட்-19' தொலைந்துபோன நிகழ்ச்சி குறித்து அமெரிக்காவின் புகழ்பெற்ற இதழ் ஒன்று ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. விமான ஓட்டி,""நாங்கள் இப்போது எங்கே இருக்கிறோம் என்பதே எங்களுக்குத் தெரியவில்லை...'' என்று தகவல் அனுப்பியதாக , அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது. மேலும், வின்சென்ட் காடிஸ் என்பவர் "அர்கோசி' எனும் இதழில் எழுதும்போது, இந்த விமானம் தொலைந்ததற்கு மாயச் சக்திகளே காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், கடற்படை விசாரணைக் குழு அதிகாரிகள்,""விமானம் செவ்வாய் கிரகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது'' எனும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டனர். இந்தச் சமயத்தில் பெர்முடா முக்கோணம் குறித்த திடுக்கிட வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள் உலக நாடுகளெங்கும் பத்திரிகைகளில் பிரசுரமாயின.

இந்த மர்ம நிகழ்ச்சிகளுக்கு மேலும் திகிலூட்டும் விதமாக,"நமது கொல்லைப் புறத்தில் கடல் மர்மம்' எனும் கட்டுரையும், "கண்ணுக்குத் தெரியாத வெளிகள்' மற்றும் "சாத்தானின் முக்கோணத்தில்' எனும் புத்தகங்களும் வெளிவந்தன. இந்த வெளியீடுகளில், "வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த மாய சக்திகள் கப்பல்களையும், விமானங்களையும் பிடித்துச் சென்றிருக்கலாம். அதில் இருந்த மனிதர்களை அந்த மாய சக்திகள் என்ன செய்தன என்று கடவுளுக்குத்தான் தெரியும்' என்று எழுதப்பட்டிருந்தன.
கரீபியன் தீவு மக்களும்,முக்கோணப் பகுதியில் நிகழும் மர்ம சம்பவங்கள் அனைத்திற்கும் மனிதனுக்கு அப்பாற்பட்ட மாயச் சக்திகளே காரணம் என்று முழுமையாக நம்பினார்கள்.
இந்த மர்மங்களுக்கு மாயச் சக்திகள்தான் காரணம் என்பதைப் பொய்யாக்கும் வகையில், அரிசோனா பல்கலைக்கழக ஆய்வு நூலகர் டேவிட் குசெ என்பவர், "தி பெர்முடா டிரையாங்கிள் மிஸ்ட்ரி சால்வ்டு' என்ற நூலை வெளியிட்டார். அவர், அந்த நூலில் பெர்முடா பகுதியில் நடைபெறும் தொலைதல்களுக்கு மனிதத் தவறுகள்தான் காரணம் என்று எழுதினார். மேலும், சூறாவளித்தாக்குதல், கடலுக்கு அடியில் ஓடும் வளைகுடா நீரோடைகள், மிகப் பெரிய முரட்டு அலைகள், கடற்கொள்ளையர்களின் செயல்கள் ஆகியவையும் காரணங்கள் என்று உறுதியாகக் கூறினார். அதற்கான தகவல்களையும் அவர் வெளியிட்டிருந்தார். சில எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும், இது மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்திகளின் வேலை என்று கதைவிடுவதற்கு வியாபார நோக்கமே காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க நிலவியல் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில்,""உலகம் முழுதும் கடலுக்கடியிலான ஹைட்ரேட்டுகள் பெருமளவில் இருக்கின்றன. குறிப்பாக, தென்கிழக்கு அமெரிக்கக் கடற்கரையை ஒட்டிய "ப்ளேக்ரிட்ஜ்' பகுதியில் இச்சேகரங்கள் மிக அதிகமாக இருக்கின்றன. இருப்பினும், அக் கடற்பகுதியில் பெர்முடா முக்கோணப் பகுதியில் நடப்பதைப்போன்ற எந்த நிகழ்வுகளும் நடப்பதில்லை. பெர்முடா முக்கோணப் பகுதியில் மீத்தேன் ஹைட்ரேட் படிமம் மிகக் குறைவு. எனவே, மர்மச் சம்பவங்களுக்கு ஹைட்ரேட்டுகள்தான் காரணம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது'' என்று தெரிவித்திருந்தது.
இதுவரை ஏராளமான விமானங்களும், கப்பல்களும் பெர்முடா முக்கோணப்பகுதியில் மிகவும் மர்மமான முறையில் மறைந்திருக்கின்றன. ஆயினும், இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் என்னவென்று உறுதியாகக் கூறமுடியாத நிலையே உள்ளது.


அமேசான் நதி பற்றிய வியக்கவைக்கும் மர்மங்களுடன் உங்களை அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்.
தொடர்ந்தும் இணைந்திருங்கள் எங்களுடன்...





Saturday, October 1, 2011

யாழ்த்தாய் - (ஆரம்பகால வரலாறு)

                                                                   யாழ்ப்பாணம் என்று வழங்கப்படும் இன்றைய நகரத்தின் வரலாறு கிபி.13ம் நூற்றாண்டில் ஆரம்பித்தது. யாழ்ப்பாண வைபவமாலை என்ற வரலாற்று இலக்கியம் அதற்கு ஆதாரமாகின்றது. மாதகல் என்ற கிராமத்தைச் சேர்ந்த மயில்வாகனப்புலவர் என்பவரே கிபி.17ம் நூற்றாண்டளவில் அந்நூலை ஆக்கியிருந்தார். யாழ்ப்பாணத்திற்கு நிர்வாக பொறுப்பு வகித்த ஒல்லாந்த அதிகாரி ஒருவரின் வேண்டுகோளின் படியே மயில்வாகனப்புலவர் இந்நூலை இயற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

                                                                ஐரோப்பியர் முதன்முதலில் காலடியெடுத்து வைத்தபோது இலங்கைத்தீவில் மூன்று அரசுகள் இருந்தன. அவையாவன ;-
                                    1) யாழ்ப்பாணத் தமிழரசு
                                    2) கோட்டைச் சிங்கள அரசு
                                    3) கண்டிச் சிங்கள அரசு
என்பனவாகும். இவற்றிலே யாழ்ப்பாணத் தமிழரசே காலத்தால் முற்பட்டதும் , வலுவுள்ளதுமாகும்.

                                                                           நல்லூரென்றழைக்கப்படும் நிர்வாக மையத்திலேயே யாழ்ப்பாணத் தமிழரசின் அரண்மனை, கோயில்கள், மற்றும் நிர்வாக அதிகாரிகளின் அலுவலகங்கள் அமைந்து காணப்பட்டிருந்தன. மந்திரி மனை, சங்கிலியன் தோப்பு, யமுனா ஏரி மற்றும் கிறிஸ்தவ ஆலயம் அமைந்துள்ள பகுதிகளாவன நல்லூர் இராசதானியின் மையப்பகுதிகளாகும்.

                                                                        நல்லூரிலுள்ள முத்திரைச்சந்தி, யானைப்பந்தி, ஆயக்கடவை ஆகியன நிர்வாகிகள் வசித்த பகுதிகளாகும்.  நல்லூரிலுள்ள வீரமாகாளியின் முன்றலிலேயே போர்த்துக்கேயப் படை வீரர்களுக்கும் - சங்கிலியனது  படைகளுக்குமிடையே போர் நடைபெற்றதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது.

                                                                        யாழ்ப்பாணம் கிபி.1619ல் போர்த்துக்கேயரது ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. அருணகிரிநாதர் தான் பாடிய திருப்புகளில் (கிபி.17ம் நூற்றாண்டு) "யாழ்ப்பாணாயன் பட்டின மேவிய பெருமாளே" என்று நல்லூர் முருகப் பெருமானை வாழ்த்திப் பரவியதனையும் நாம் காண்கின்றோம். நல்லூரிலுள்ள முருகப்பெருமானது திருக்கோவிலை முதன்முதலில் அமைத்தது 07ஆம் புவனேகபாகுவான செண்பகப்பெருமாள் என  "நல்லூர் கட்டியம்" கூறுகிறது. "சபுமல் குமரய்ய" என்ற சிங்கள பிரதானியே செண்பகப்பெருமாள் ஆவான்.

                                                                           இவ்வாறாக சீர்மிகு யாழ்ப்பாண தமிழ் இராசதானியின் ஆரம்பகால வரலாறு அமைவதாகக் கருதலாம்.

                                                        "வாழிய யாழ்த்தாய்....!"

Sunday, September 25, 2011

''மாற்றம்...''

அன்றிருந்த நிலை ஏனோ இல்லை அவள் மனதில். அன்று அவன் அன்பின் நிழலில் இளைப்பாறிய காலங்கள் துவண்ட மனதை துண்டுகளாக்கி உடைத்தெறிந்தன. அடிபட்ட கால வெள்ளத்தின் சுழற்சி அலைகளில் துரும்பாகி சிதைந்துவிட்ட அவள் எண்ணங்களில் இன்றுவரை வண்ணம் கலையாமல் அவன் விம்பம் மட்டும் தீபமாகியது.

விழி மூடினாலும் ; விழியில் வழியும் விழி நீராயும் அவன் மட்டுமே அவளின் உறவு. அவளின் மௌனங்களின் அசைவைக் கூட கவியாக்கும் அவனது பரிசுத்த அன்பு. காலத்தின் கோரத்தாண்டவத்தில் இவையனைத்தும் கம்பமற்ற கூடாக சிரகம்பம் செய்யப்பட்டது.
.
இன்று வழி தெரியாமல் வாழ்க்கையில் தவிக்கும் அவள்; அன்று அவன் நட்பின் சாரலில் பூவாய் மலர்ந்தவள்.
அன்று அவள் சோகம் என்பதையே அறியாதவள்; இன்று புன்னகையின் வேரையே தொலைத்தவள்.

நண்பனாய் அவளுக்கு அவன் கிடைத்தது- அவள் செய்த பெரும் பலன். அவளுக்கு அவன் அவளுக்கு ஒரு நண்பனாய் மட்டுமல்ல; ஒரு தாயாக-தந்தையாக-சகோதரனாக-நண்பனாக என அனைத்து உறவாகவும் இருந்த அன்பாளன்.

எது எவ்வாறிருப்பினும் ஒரு ஆணும்-பெண்ணும் கண்ணியமாக பழகுவதைக்கூட கறை படிந்த  கண்களோடு பார்க்கும் நீச சமுதாயம் இவர்களுக்கு மட்டுமென்ன விதிவிலக்கா...?

எனினும் காலப்போக்கில் இவர்கள் நட்பு அங்கீகாரம் பெற்றது. எனினும் நட்பின் இனிமையை சுகிக்க இன்று அவர்கள் நண்பர்களாக இல்லை.

என்னவாயிற்று இவர்களுக்கு....???

உங்கள்  எண்ணங்கள் எங்கெங்கெல்லாமோ சுழரலாம்.
ஆனால்...?
நிகழ்ந்தது என்ன???

ஆம் போராட்டம் நிறைந்த வாழ்வின் ஓர்  நாடகம் இது.

ஏதோ ஓர் கரி நாளாய் அன்றைய நாள் அவர்களின் வாழ்வை உடைத்தெறிந்தது.
ஏதோ ஓர் விபத்தில் அவளை காப்பதற்காய் தன் உயிரை வரமாக்கினான் அவன். அவள் உயிர்த்துடிப்பிற்காய் தன் உயிரை தொலைத்து அவன் கல்லறையுள் உறைந்துபோனாலும் என்றென்றும் நட்பின் நாதமாய் என்றுஃ அவன் துடிப்பு அவளினுள்ளே வாழும்.

காலத்தினால் பிரிக்கப்பட்ட நட்பாயினும் கருத்தொருமித்து ஒன்றாய் வாழ்கிறது இன்றும்...

எனினும் அவன் கல்லறையின் இறுதிக் கணங்களிலேயே சமூகத்தின் அங்கீகரிப்பு அவர்கள் தெய்வீக நட்பிற்கு.
மிகவும் கொடுமை இதை விட வேறேது..?

மாறவேண்டும் இந்நிலை...!

மாற்றவேண்டும் சமூகத்தை நாம்...!

Thursday, July 14, 2011

இன்றைய ஊடகங்கள்.

இன்றைய நாட்களில் ஊடகத்துறையே மக்களின் வாழ்க்கையில் பெரும்பங்கு வகிப்படனை கானமுடிகின்ரத். அந்தவகையில் ஒரு சமூகத்தின் உயர்ச்சியில் ஊடகத்துறையே பெருமளவு தங்கியுள்ளமை வெட்டவெளிச்சமான உண்மை எனலாம். ஊடகம் எனும்போது 'போயுரைக்கது உண்மைகளை உலகிற்கு உரைப்பது' என பொருள் கொள்ளல் நன்று.

ஒவ்வொரு ஊடகவியலாளனும் உண்மையாகவும், தெளிவாகவும் , நேர்மையாக்கவுமிருக்க வேண்டும் என்பது பரிபூரண உண்மை எனலாம்.

அந்தவகையில் ஊடகத்துறை எனும்போது அங்கே தனிப்பட்ட விருப்பு-வெறுப்பு என்பவற்றுக்கு சிறிதளவேனும் இடமளிக்கது ஒவ்வொரு ஊடகவியலாளனும் மிக நேர்த்தியாகத் தொழிர்ப்பட வேண்டும். தனிப்பட்ட ரீதியில் அவர்கள் புரியும் ஒவ்வொரு தவறுகளும் அவர்களையும் ஊடகத்துரையினையும் மட்டுமல்லாமல் சமூகத்தையும் பாதிக்குமேன்பது மனங்கொள்ளத்தக்கது.

அந்தவகையில் ஒரு தனிப்பட்ட தன சொந்தவிடயத்திலேனும் இவர்கள் தவறுவார்களாயின் அது ஊடகத்துறை மீதுள்ள மக்களின் பரிபூரண நம்பிக்கைக்கும், ஆதரவிற்கும் பங்கம் விளைவிப்பதாய் அமையும் எனலாம்.

எனவே ஊடகவியலாளன் என்பவன் தனது சுயநிலை என்பதனை சரியானதாகப்பென வேண்டும் என்பது கட்டாயமானது. இந்த சமுதாயத்தின் முன் ஊடகவியலாளர்கள் கொண்டுள்ள கடமை மிகப்பெரியதாகும். அதை நோக்குகையில் ஒரு விடயத்தின் நேர்த்தியை அறிந்து, தெளிவாக சிந்தித்து, அதன் நன்மை-தீமை, சரி-தவறு என்பவற்றை சமூகத்திற்கு வெளிப்படுத்தும் திறன் நேர்த்தியானதாக இருக்கவேண்டும்.

இவ்வாறாக சமூக வளர்ச்சியானது ஊடகவியலாளர்களிடமும், ஊடகங்களிடமுமே தங்கியுள்ளமை நிதர்சனமான உண்மையே! எனவே ஒவ்வொரு ஊடகவியலாளர்களும் தத்தமது போருப்பரிந்து நேர்த்தியாக செயற்ப்பட வேண்டியது மிக மிக அவசியமானதொன்று எனலாம்.



*குறிப்பு- மேலே கூறப்பட்ட விடயங்கள் தனிப்பட யாரையும் சார்ந்தவை அல்ல. பொதுப்படையான கருத்துக்கள் மட்டுமே என்பதை மனதில் கொள்க.....!!! *

Sunday, July 10, 2011

இணையத்துள் யாழ்த்தாய்...!

யாழின் கல்விநிளையானது ஒரு காலத்தில் அதியுச்ச வளர்ச்சி பெற்று சிறப்புடன் காணப்பட்டது. எனினும் இன்று அந்த நிலை வீழ்ச்சியடைந்து சிறிது சிறிதாகப் பின்தள்ளப்பட்டு மிகவும் கவலைக்குரிய நிலையில் தற்காலம் காணப்படுகிறது.

ஒருகாலத்தில் மாணவர்கள் பாடசாளைக்கல்வியையும், கல்வி நிறுவனங்களின் உதவியையும் நாடியே தமது கற்றல் வாழ்க்கையை தொடர்ந்தனர். கல்வியை வழங்க கூடிய தொழிநுட்ப சாதனங்களின் வருகையின் தடத்தையே காணமுடியாத அக்காலத்தில் கல்விநிலை அத்யுச்ச்மாகக் காநப்பட்டுஇருந்தது.

எனினும் தற்காலங்களில் தொழிநுட்ப உயர்ச்சிகள் காரணமாக கல்வித்துறை வளர்ச்சி கண்டாலும்; மாணவரது கற்கும் திறன் பாரிய வீழ்ச்சியை எதிர்நூக்கி வருவது கவலைக்குரிய விடையம் எனலாம்.

அந்தவகையில் முக்கியம் பெறுவது தற்க்கால இணையப்பாவனை. கல்விக்கான பாவனை மார்ரமடைந்துவருகின்றமை வெட்கக்கேடான விடயமாகும்.

அதிலும் இணையத்தில் இன்று பேஷ் புக் பாவனையே யாழின் மாணவர்களிடம் வேரூன்றி காணப்படுகின்றது.

மாணவர்கள் கல்விவழர்ச்சிக்கு இணையத்தை பயன்படுத்தும் நிலை மார்ரமடைன்ஹு பொழுதுபோக்கிற்க்காக மட்டுமே இணையத்தை நாடுவதனால்த்தான் கல்விநிலை பின்செல்கின்றது எனலாம்.

பேஷ் புக், ட்விட்டர் போன்ற சமூக வலைப்பின்னல்களின் ஆதிக்கமும்; அதிகரித்து வருகின்ற வலைத்தள பிராந்திய அச்சுறுத்தல் முதலியவற்றின் இனிப்பான செயர்ப்பாடுகளால் திசை திருப்பப்பட்ட மாணவர்கள் இன்று கல்வியில் பிந்தள்ளப்படுவ்துடன்; இணைய மோகத்திலிருந்து வெளிவர முடியாமல் வாழ்க்கையையே அழித்துக்கொள்வது கசப்பான உண்மையே...!

யாழின் கல்விநிலை மீண்டும் உயர வேண்டும்...!

யாழ் மாணவர்கள் வரலாற்றில் சாதனை பதிக்கவேண்டும்...!

தோழர்களே விழிப்படைவோம்...
இணைய மோகத்திலிருந்து யாழ்த்தாயை மீட்டிடுவோம்...!
ஜெயித்திடுவோம்..!!!

Saturday, July 9, 2011

விடியலின் ஜனனம்
உங்களை அன்போடு
வரவேற்கிறது...!